Tuesday, October 26, 2010

நட்பு!

நட்பு!


இது இல்லாத எவருமே இல்லை. உலகில் உள்ள அனைவரின் வாழ்கையிலும் உள்ள ஒரே உறவு நட்பு. ஏன் அடித்து கொள்ளும் இரு வேறு விலங்குகளும் கூட நட்புறவுடன் பழகுவதை நாம் பார்க்க முடியும். ஏனென்றால் நட்பு வலிமையானது. தன்னலமற்றது. யார் சொல்லியும் வராததது. தனக்கு நிறைய நண்பர்கள் உள்ளார்கள் என்பதை விடவும் ஒரே ஒரு நண்பன் இருந்தாலும் அன்போடு இருந்தால் அது போதும் உலகையே ஆளலாம். நம் ஒவ்வொரு துன்பத்திலும் உடல் மற்றும் பணகஷ்டதில் உதவுவது நண்பர்களே. நம் வாழ்கையில் பின்னோக்கி பார்கையில் தன் துன்பதில்ளெல்லாம் தன்னுடன் நின்ற நண்பர்களை பேசாதவர்களே கிடையாது. இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் உடன் இருப்பது நட்பு. இதை நாம் மருத்துவமனைகளில் காண முடியும். உடனிருந்து யியற்கை உபாதைகளை சுத்தம் செய்வது கூட நண்பர்களே. நட்பு இல்லாத மனித உயிர்களே கிடையாது. உலகில் நம் அத்தனை உறவுகளும் முன்பே நிர்ணிக்கப்பட்டது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, மகன், மகள் என அத்தனையும், ஏன் திருமணம் கூட சொர்க்கத்தில் நிச்சயிக்க பட்டது. அனால் நட்பு மட்டுமே நம் வாழ்வில் நாமே தேர்ந்தெடுப்பது. இதில் விரிசல் விழுந்தாலும் சேர்த்துவைக்க யாரும் இல்லை. இருந்தும் வாழ்வின் எல்லை வரை விரிந்து கிடப்பது நட்பு. இது "A" போன்றது. மேல் நுனியில் ஒருவரை ஒருவர் அணவு கொடுத்து தாங்கி நிற்பர். நடுவில் இணைப்பு கோடாய் நட்பு. Friendship forever.


BALA.

அன்பு!

அன்பு!

நமக்கு அன்பு என்றால் என்ன என்பதை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது அம்மா. அதை யாரும் மறுப்பதில்லை. தன் பிள்ளைகள் என்னதான் தவறுகள் செய்தலும் அதை மன்னித்து அவர்களை தன அன்பால் மட்டுமே திருத்துபவள் அவள் மட்டுமே. பிள்ளைகளும் என்றுமே தன் அத்தனை பிரச்சனைகளையும் மனம் விட்டு கூறுவதும் அவளிடம் மட்டுமே. தன் மகனை சான்றோன் என கிட்ட தாய் மட்டுமல்ல அவன் திருடனை இருந்தாலும், கொலைகாரனாக இருந்தாலும் கூட என்றும் அவனுக்காக மனமுருகுபவள் அவள். தன் மகளுக்காக அவள் மகளின் திருமணத்திற்கு பின்னும் தன் ஆயுள் முடியும் வரை போராடுபவள். தன் பிள்ளைகள் மட்டுமின்றி எல்லாருடைய குழந்தைகளையும் தன் குழந்தையாய் பர்ர்பவள். நாம் பலமுறை நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இதை உணர முடியும். உணவு பரிமாறும் போதும், கண்டிக்கும் போதும் அன்னையின் அன்பு தெரியும். நம் நண்பர்களுக்கும் நம் தாய் அவ்வாறே தோன்றும். இது மாறாதது.அன்னை தெரசாவின் அன்பு உலகம் அறிந்ததே. நோய் கொண்ட, அனாதையான அத்தனை உயிர்களையும் தன் தாய் அன்பினால் அரவணைத்தவர் அவர். அதே போல் அன்போடு வளர்ப்பதும் அவளே. பையன்கள் வளர்ந்த பின்பு தன் மனைவியடம் எதிர் பார்ப்பது தான் சிறு வயது முதல் அனுபவித்து வளர்ந்த தாயின் அன்பு மட்டுமே.அண்மையில் திருச்சி ஐயப்பன் கோயிலில் இருந்த கல்வெட்டில் படித்தது"உலகில் மிகவும் அமைதியான இடம் எது? தாயின் மடி!" --------------- உண்மை தானே?

பாலா.