வெயிலின் தாக்கம் குறைய:
நான் எப்பொழுதும் வெயில் காலம் வந்தவுடன் ஒரு குளியல் பொடி தயாரிப்பேன். வியர்குரு, அரிப்பு இல்லாமல் கோடைகாலத்தை கடந்து விடலாம்.
தற்போது வேப்பம்பூ பூத்திருக்கும். வேப்பம்பூ சிறிது காயவைத்து அரைத்து சலித்து வைத்து கொள்ளவேண்டும்.
கடலைமாவு, பயத்தம் மாவு, வேப்பம்பூ பொடி, ஸ்நான பொடி(தேவையெனில் வாசனைக்காக) கலந்து தினமும் குளித்து வர கோடைகாலத்தை சுகமாக கடக்கலாம்.