Sunday, June 9, 2013

மனசோர்வு: Bipolar Disorder:

மனசோர்வு: Bipolar Disorder:


ஆரோகனம் படம் மதியம் பார்த்தேன்.மனசோர்வு பற்றிய படம். நான் சிறுவயது முதலே இது போன்ற சிலரை கண்டதுண்டு. 

நமக்குள்ளும் மன சோர்வுகள் வருவதுண்டு. நாம் வெளிபடுத்துவதிலை. அவர்கள் வெளிபடுத்துகிறார்கள். மற்றபடி நாமும் மனசொர்வுடன் போரடிகொண்டேதான் இருக்கிறோம் வாழ்நாள் முழுமைக்கும்.

தியானம் பழகும் அனைவருக்கும் முதலில் அவர்கள் மனதை கவனிக்க சொல்வார்கள். 
மனதை கவனிக்கும் என் போன்றவர்களுக்கு எத்தனை முறை இதனால் நான் தாக்கப்படுகிறேன் என்பது தெரிகிறது. பலர் இது தெரியாமலேயே வெற்றி கொள்கின்ரனர். சிலர் இதனால் மற்றவர்களிடம் கோவம் கொள்கின்ரனர். மனம் புரிந்து நடப்போம். அன்பை கொடுப்போம்.

இன்றும் என்னை சுற்றி இருக்கும் பலர் இதற்க்கான மருந்துகளை எடுத்து கொண்டு இருக்கின்றனர்.  அவர்களுக்கு தேவை பரிதாபம் இல்லை. அன்பான அரவணைப்பு. 

இந்த அரவனைப்பையே பற்றிகொள்ளும் மனசொர்வுடயவர்களும் உண்டு.  சற்றே முள் மேல் விழுந்த சேலை போல இவர்களை நாம் கையாண்டு சரிபடுத்த முடியும்.

அவன் ஒரு லூசு என்று ஒரே வார்த்தையில் சொல்லி அவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்குவதை விடவும் அன்போடு பழகி நம்மோடு சேர்த்து கொள்வோம்.


எங்கு போய் முடியபோகிறதோ?

எங்கு போய் முடியபோகிறதோ?

முன்பெல்லாம் குப்பை தொட்டிகளில் மட்டும்தான் பிளாஸ்டிக் பைகள் பார்க்க முடிந்தது. அனால் இப்பொழுதோ எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
இந்த கேரி பைகள் நம் வருகால சந்ததியினருக்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் செய்யபோகிறது. தெரிந்தும் நாம் ஏன் இதை உபயோகப்படுத்ட வேண்டும்.
பலருக்கும் கைகளில் பை எடுத்துசெல்வது நாகரீகம் அற்ற செயலாக கருதுகின்றனர். கூடைகள் மறைந்துவிட்டன. 
எல்லாமே பிளாஸ்டிக் மாயம். சோப்பு, ஷாம்பூ, பருப்பு, அரிசி, பழம், துணி, டி, காபி, சாம்பார், சாதம் என எல்லாமே பிளாஸ்டிக் பைகளில்.
வயல்கள், தோப்புகள், கொல்லைகள், நதி, வாய்க்கால், சாக்கடை அனைத்திலும் பிளாஸ்டிக் பைகள்.


எங்கு போய் முடியபோகிறதோ?