நன்றியுணர்வு.....
உங்களுக்கு கிடைத்திருக்கும்
அனைத்து நன்மைகளுக்கும்
வசதிகளுக்கும்
நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கும் பொழுது,
அந்த நன்றி உணர்வை வெளிப்படுத்தும் பொழுது,
இன்னும் நிறைய வசதிகள் வாய்ப்புகள் நன்மைகள்
கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகிறது.
இதில் முக்கியமானது,
இந்த நன்றி உணர்வு என்பதே
தானாக நம் உள்ளிருந்து வரும் உணர்வாக இருக்க வேண்டுமே தவிர
இனிவரும் காலங்களில் இதெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான
ஒரு ஒப்பந்தம் செய்வது போல நன்றி உணர்வு அமைந்துவிடக்கூடாது.
நன்றி உணர்வு பற்றி கொடுக்கப்பட்ட
அனைத்து விஷயங்களும் ஒன்றை தெளிவாக சொல்கின்றது.
அது நன்றி உணர்வோடு இருக்கும்பட்சத்தில்
ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்ற விதிப்படி
நாம் எதற்கு நன்றியோடு இருக்கிறோமோ
அவற்றை நாம் மீண்டும் பெறுகிறோம் என்பதே.
ஆனால் இவற்றை எல்லாம் பெற வேண்டும்
என்பதற்காக நன்றி உணர்வோடு இருப்பது என்பது
இந்த விதியின் கீழ் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
எனவே நன்றி உணர்வோடு,
முழுமையான நன்றி உணர்வோடு,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நன்றி உணர்வோடு வாழ்வோம்...
அனைத்தையும் பெறுவோம்...
இவன்,
அற்புத வாழ்க்கை..
குமாரவேல்.
No comments:
Post a Comment